இதில் மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும், 22 பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி இருக்காது. இதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இருக்கும். தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் ரயிலின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் குளிர்சாதன வசதி இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த ரயிலில் முன்னும் பின்னும் இன்ஜின் இருக்கும். அதே போல், இதற்கு அடுத்தபடியாக வந்தே மெட்ரோ ரயிலை தயாரிக்க இருக்கிறோம். இந்த ரயிலானது குறைந்தபட்ச தூரத்தில் இயக்கப்படும். அதாவது,சென்னை-செங்கல்பட்டு, சென்னை-காட்பாடி இது போன்று குறைவான தூரத்தில் இயக்கப்படும். இந்த வந்தேமெட்ரோவானது முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட ரயிலாக இருக்கும். இந்த ரயிலில் ஒரு பெட்டியில் 300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் போன்று வந்தே சாதாரண் ரயில்: சென்னை-காட்பாடிக்கு ஏசி ரயில்; ஐசிஎப் மேலாளர் மல்லையா தகவல் appeared first on Dinakaran.