பெரம்பலூர்,செப்.16: ஒவ்வொரு ஆண்டும் செப். 17ம் தேதி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், மாவட்ட மதுவிலக்குப் பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை பிரிவு மற்றும் பெரம்பலூர், மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் காவல் அலுவலங்களில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல்நிலையங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.
