இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று காலை உருதுப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதே பள்ளி வளாகத்தில் மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் படித்து வருகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள் காத்திருப்பதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை கட்டப்படுகிறது. அதனையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.
The post ராயபுரம் உருது பள்ளியில் ரூ.40 லட்சம் செலவில் உணவுக்கூட பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
