இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கைதி தனசேகரன் தனது அறையில் ரத்த அழுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் தனசேகர் இதுபோல ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
The post கடலூர் மத்திய சிறையில் ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.