இதுகுறித்து, சிறுமியின் தாயார் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் பிரபாகரனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தழிழரசி குற்றவாளி பிரபாகரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் , ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
