இதையடுத்து சீட் உறுதி செய்ய சிக்கமகளூரு நகரில் உள்ள மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர் விஸ்வநாத் என்பவரிடம் சைத்ரா தொழிலதிபரை அழைத்து சென்றுள்ளார். அப்போது விஸ்வநாத் உடனடியாக ரூ.50 லட்சம் பணமும் அதன் பிறகு ரூ.3 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் பணம் கொடுப்பவருக்கே தேர்தலில் பாஜ போட்டியிட சீட்டு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரூ.5 கோடி வரை பணத்தை வழங்கி உள்ளார். தேர்தல் நெருங்கி வந்த நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் விஸ்வநாத் இமயமலையில் பயணம் செய்த போது இறந்து விட்டதாக சைத்ரா தெரிவித்துள்ளார்.
சந்தேகம் அடைந்த தொழிலதிபர் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் விசாரித்த போது விஸ்வநாத் என்ற பெயரில் ஆர் எஸ் எஸ்சில் முக்கிய பொறுப்பில் யாரும் கிடையாது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்துகொண்ட தொழிலதிபர் சைத்ராவிடம் கேட்ட போது அவரை குண்டர்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் தனக்கு நெருக்கமாக உள்ள நீதிபதிகளிடம் கூறி சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதையடுத்து பெங்களூருவில் உள்ள பண்டேபாளையா போலீஸ் நிலையத்தில் தொழிலதிபர் புகார் அளித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடுப்பியில் வைத்து சைத்ரா குந்தாபூரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவருடன் மோசடியில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
The post சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த கர்நாடக பாஜ பெண் பிரமுகர் கைது appeared first on Dinakaran.