கொளக்காநத்தம் அரசு பள்ளியில் அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி

பாடாலூர், செப். 13: ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு பள்ளியில் அடுப்பிலா ஆரோக்கிய சமையல் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு வளர் இளம் பெண்கள் மற்றும் வளர் ஆண்களுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி நேற்று நடைபெற்றது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, சித்த மருத்துவர் பிரியதர்ஷினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்யாவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 56 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அடுப்பில்லாமல் சமைத்து மாணவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை சாப்பிட்டுப் பார்த்து முதல் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ2,000, இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகனா, மேற்பார்வையாளர் ஜெயா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலத்தூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூமா வரவேற்றார். தலைமையாசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.

The post கொளக்காநத்தம் அரசு பள்ளியில் அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: