அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த பார்வையற்ற மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

 

அந்தியூர், செப்.12: ஈரோடு அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி ஜோதிபுரம் மீன் காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள 5 அடி தண்ணீர் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

The post அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த பார்வையற்ற மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: