திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

 

திருத்தணி, செப். 11: திருத்தணி அடுத்த புச்சிரட்டி பள்ளி கிராமத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திருத்தணி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோதண்டம் தலைமை தாங்கினார், ஒன்றிய கவுன்சிலர் நீலா கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், துணை அமைப்பாளர் ஏகாம்பரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மிஸ்டர் சவுத், இந்தியா ஆணழகன் திலீபன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் டில்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் பகுதி இளைஞரணி அமைப்பாளர்களுக்கு நேர்காணல் இன்று நடைபெற உள்ளது. அந்த நேர்காணலில் பங்கு பெறும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

The post திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: