இந்நிலையில், மஜதவுடனான கூட்டணி குறித்து மீண்டும் பேசியுள்ள பாஜ மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, ’பிரதமர் மோடி மற்ற விவகாரங்களில் பிசியாக இருக்கிறார். இன்னும் 2 நாட்களில் மோடி மற்றும் அமித் ஷாவுடன் பேசி முடிவெடுக்கப்படும். இதுவரை அவர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். நான் முன்பு பேசியபோது கூட்டணி குறித்த எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது எதுவும் முடிவாகவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மற்ற தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். பிரதமர் மோடி பல விவகாரங்களில் பிசியாக இருக்கிறார். எனவே அடுத்த 2-3 நாட்களில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்படும்’ என்று எடியூரப்பா தெரிவித்தார்.
The post பிரதமர் மோடி பிசியாக இருக்கிறார் பாஜ – மஜத கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: எடியூரப்பா தகவல் appeared first on Dinakaran.