அரியலூர் மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் இன்று (9ம்தேதி) நடக்கிறது. ரேஷன்கடை தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம், இன்று (9ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடக்கிறது. அக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம், கீழையூர் கிராமத்திற்கு துணை பதிவாளர் (பொ.வி.தி) உடையார்பாளையம் வட்டம், வங்குடி கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், செந்துறை வட்டம். நக்கம்பாடி கிராமத்திற்கு தனித்துணை ஆட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம். ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம். மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்யலாம். புதிய ரேஷன்கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம்.

The post அரியலூர் மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: