அதில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியில் அமர செய்யப்பட்ட சதியே குண்டு வெடிப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் விசுவாசியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, உளவுத்துறையுடன் இணைந்து இந்த சதி திட்டத்தை அரங்கேற்றியதாகவும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆவணப்படத்தின் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சேனல் 4 ஆவணப்படத்தின் கருத்துகளுக்கு கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜபக்சே கூறியதாவது, “தன்னை அதிபராக்க இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்த சதி திட்டம் தீட்டியதாக கூறுவது பெரும் அபத்தம். இந்த குற்றச்சாட்டு ராஜபக்சேவின் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் முயற்சி. ராணுவ அதிகாரிகள் எப்போதும் அரசுகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஆனால் தனி நபர்களுக்கு அல்ல. சேனல் 4ன் ஆவணப்படம் ஒரு கட்டுக்கதை” என்று தெரிவித்துள்ளார்.
The post 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பு கோத்தபயவை மீண்டும் அதிபராக்க செய்யப்பட்ட சதியா? சேனல் 4 ஆவணப்படத்துக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.