இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி மகளின் திருமணம் நடந்த அதே நட்சத்திர ஓட்டலில் சுகதனும், மனைவி சுனிலாவும் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் மதியம் வரை கணவன்- மனைவி 2 பேரும் அதே ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளனர். மாலையில் அறையை துப்புரவு செய்வதற்காக ஊழியர் சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாக தட்டி பார்த்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது சுகதனும், சுனிலாவும் ஒரே துப்பட்டாவில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். போலீசார் 2 பேரின் உடல்களையும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post மகளின் திருமணம் நடந்த நட்சத்திர ஓட்டலில் சென்னை தொழிலதிபர் கேரளாவில் மனைவியுடன் தற்கொலை appeared first on Dinakaran.