சென்னை: சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் சார்பில் இன்று முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் ‘தி சென்னை க்விஸ்’ என்ற மாபெரும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. முன்னதாக நேற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் பிரியா, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதன தொடர்ச்சியாக நாளை தனியார் பள்ளி மாணவர்களுக்கும், 8ம்தேதி சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளி மாணவர்களுக்கும் வினாடி வினாப் போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ4,000 ரொக்கப் பரிசாக அன்றைய தினம் வழங்கப்படும்.
The post வினாடி வினா போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார் appeared first on Dinakaran.