கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 3 பேர் சிக்கினர்

பெரம்பூர்: புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (18). கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான சந்தோஷ் மற்றும் இமானுவேலுடன் பேசின்பிரிட்ஜ் மோதிலால் தெருவில் உள்ள மற்றொரு நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்போது, இவர்களை வழிமறித்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, 2 செல்போன்களை பறித்து சென்றனர். அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் சுரேஷிடம், நந்தகுமார் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் விரைந்து செயல்பட்டு, தப்பிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் 2வது தெருவை சேர்ந்த நவீன் (22), கே.பி பார்க் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) மற்றும் எம்கேபி நகரை சேர்ந்த பிரேம்குமார் (19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: