சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 82 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து. சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் மதிப்பிலான 3,907 பவர்டில்லர்கள் மற்றும் 293 விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கிடும் விதமாக மூன்று விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 181 கோடியே 40 இலட்சம் ரூபாய் மிதமான வேளாண் வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக மூன்று விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான செயல்முறை ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து. வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு 1,50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கியது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
* வேளாண்-உழவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல்
சென்னை – கிண்டி, வேளாண் தொழில்நுட்ப பசுமை பூங்காவில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திற்கான 32 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்டம் – தாராபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தலில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய்களுக்கான இயந்திரங்களுடன் கூடிய நவீன சிப்பம் கட்டும் அமைப்பு மற்றும் சந்தை ஊக்குவிப்பு மையம், விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர், வல்லம், செஞ்சி, கடலூர் மாவட்டம் – குமராட்சி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, அரியலூர் மாவட்டம் – அரியலூர் ஆகிய இடங்களில் 22 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், என மொத்தம் 62 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் ழவர் நலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
* விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தல்
2023-24ஆம் ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நில உடமையினைக் கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் பவர்டில்லர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, முதற்கட்டமாக 35 கோடி ரூபாய் மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் களையெடுப்பான் கருவிகள், என மொத்தம் வழங்கப்படுகிறது. 293 விவசாயிகளுக்கு விசை 4200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் இதனை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று இரண்டு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் ஒரு விவசாயிக்கு விசை களையெடுப்பான் கருவி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
* 2022-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரண நிதி வழங்குவதற்கான ஆணைகள் வழங்குதல்
கடந்த 2022-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவாக மழை பெய்த காரணத்தினால் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக 3 இலட்சத்து 52 ஆயிரத்து 797 ஏக்கர் சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. பரப்பில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள் 33 பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து 33% மற்றும் அதற்குமேல் பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துரையை பரிசீலித்து பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,34,305 விவசாயிகளுக்கு ரூ.13271 கோடியும், சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 25,847 விவசாயிகளுக்கு ரூ.25.77 கோடியும், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 17,096 விவசாயிகளுக்கு ரூ.13.85 கோடியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு ரூ.6.63 கோடியும், விருதுநகர் மாவட்டத்தில் 3,220 விவசாயிகளுக்கு ரூ.2.40 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட 61 விவசாயிகளுக்கு ரூ.443 இலட்சமும், என மொத்தம் ரூ.181.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திட புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மூன்று விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் முனைவர் இரா. நந்தகோபால், இ.ஆ.ப., வேளாண்மை ஆணையர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப, வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப., வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
