பயிர் விளைச்சல் போட்டியில்விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

திருவிடைமருதுார், செப். 3: மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டுமென வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிராம வேளாண் குழுவிற்கான முன்பருவ பயிற்சி முகாம் திருப்பனந்தாள் வட்டாரம் கருப்பூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சிவவீரபாண்டியன் தலைமை வகித்து பேசினார்.

சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் பண்ணை குடும்பங்களுக்கு தென்னை கன்றுகள் வழங்குதல் பற்றியும் கூறினார். இந்த முகாமில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக இடுபொருட்கள் அடங்கிய மினிகிட் அளிக்கப்பட்டு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

The post பயிர் விளைச்சல் போட்டியில்விவசாயிகள் பங்கேற்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: