வலங்கைமானில்கலைஞர் நூற்றாண்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

வலங்கைமான், செப். 1: வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை எழுதுதல், கவிதை ஒப்பித்தல், பேச்சு போட்டி, விளையாட்டுப் போட்டிக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சுகந்தி முன்னிலை வகித்தார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டப்பட்டனர்.

The post வலங்கைமானில்கலைஞர் நூற்றாண்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: