தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்.. 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து.. 73 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 73 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மத்திய ஜோகன்னஸ்பர்க் உள்ள 5 மாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் தீவிரமாக பரவியது. இந்த பயங்கர தீ விபத்தில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 73 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தென்னாப்பிரிக்க பேரிடர் மேலாண் படையினர் 43 பேரை தீ காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

The post தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்.. 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து.. 73 பேர் உடல் கருகி பரிதாப பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: