இந்நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கப்போவதாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன் வந்து மேல்முறையீடு செய்து விசாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது நான்காவதாக அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக பதிவிடப்பட்டுள்ளது.
The post 3 அமைச்சர்களை தொடர்ந்து ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வருகிறது: மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் appeared first on Dinakaran.
