காரில் மது பாட்டில் கடத்தியவர் கைது

 

பல்லடம், ஆக.30: பல்லடம் அருகேயுள்ள மானாசிபாளையத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரு காரில் 80 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் ஊராட்சி மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் மது பாட்டில்கள் இருப்பதை கண்டனர். இதையடுத்து அந்த காரில் வந்த வதம்பச்சேரி நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (37) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மது பாட்டில்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டார். உடனே அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மொத்தம் 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post காரில் மது பாட்டில் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: