டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

சென்னை: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி, வெண்பேடு, காயார், பொன்மார், சோனலூர், புதுப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சென்னை புறநகர் மற்றும் தென்சென்னை பகுதிக்கு தினந்தோறும் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம், கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இதற்கான தற்காலிக அனுமதி வருவாய்த்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கடந்த 2021ம் ஆண்டிற்கு பிறகு தற்காலிக அனுமதியை புதுப்பித்து வழங்க வருவாய்த்துறை மறுத்து விட்டது. இதை கண்டித்தும், நிலத்தடி நீரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எடுத்து செல்ல வருவாயத்துறை சார்பில், நிரந்தர அனுமதி வழங்கக்கோரியும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரிகள் இன்று (30ம்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

The post டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: