கடந்த 11ம் ேததி வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை ஆய்வு செய்த போது, அதில் குழந்தையின் செயின் என மொத்தம் 22 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் வெளியாட்கள் யாரும் வராத நிலையில், நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. கடந்த 18ம் தேதி முதல், வீட்டில் வேலை செய்து வந்த அனு என்பவர் வேலைக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே வீட்டில் மாயமான 22 சவரன் நகைகள் அனு தான் திருடியிக்க கூடும்/ எனவே அவரை பிடித்து நகைகளை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்திய போது, வீட்டில் வேலை செய்து அனு தான் நகைகள் திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து தலைமறைவாக உள்ள வேலைக்கார பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
The post துபாயில் பணிபுரியும் இன்ஜினியர் வீட்டில் 22 சவரன் கொள்ளை: வேலைக்கார பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.
