கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூலி தொழிலாளிக்கு சரமாரி குத்திக்குத்து

அண்ணாநகர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இருவரும் கூலி தொழிலாளி. இவர்கள் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

ஆத்திரமடைந்த மணிகண்டன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதனால் சதீஷ்குமார் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

The post கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூலி தொழிலாளிக்கு சரமாரி குத்திக்குத்து appeared first on Dinakaran.

Related Stories: