இதுபற்றி, ராஜ்குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பிரசாந்த் மற்றும் அண்ணாமலை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
உடனே கஞ்சா குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, கஞ்சா வியாபாரிகளான புதுப்பேட்டை அய்யாசாமி தெருவை சேர்ந்த விக்கி (எ) விக்ரம் (19), கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்கில் ெதாடர்புடைய கஞ்சா பெண் வியாபாரியான பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செமத்தியா (52), அவரது தோழி சத்தியவாணி (எ) பொம்முக்குட்டி (42) ஆகியோருடன் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அதை
தொடர்ந்து போலீசார் செம்மத்தியா, சத்தியவாணி, விக்கி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
The post கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; பெண் கஞ்சா வியாபாரிகள் ரவுடி உள்பட 3 பேர் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.