சென்னிமலையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி

 

சென்னிமலை,ஆக. 27: சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடக்கும். அதன்படி, நேற்று கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சென்னிமலை பார்க் சாலையில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாமி அம்மாள் மற்றும் வள்ளி – தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர். அங்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சென்னிமலையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: