கோபி அருகே ஓடும் வேனில் தீ விபத்து

 

கோபி, ஆக.26: கோபி அருகே கேஸ் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையம் வெங்கமேட்டை சேர்ந்தவர் குமாரசாமி. தேங்காய் வியாபாரி. குடும்பத்துடன் பழனி செல்வதற்காக தனது வேனில் ஒத்தகுதிரையில் பெட்ரோல் மற்றும் கேஸ் நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கோபி -ஈரோடு சாலையில் சென்ற போது வேனின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது.வேனை நிறுத்தும் முன் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக குமாரசாமி, சுமார் 200 மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து கோபி தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் முன்னனி தீயணைப்பு வீரர்கள் முருகன், மாதப்பன்,கோபாலகிருஷ்ணன்,தேவராஜ்,மயில்சாமி,ராமச்சந்திர மூர்த்தி, வெங்கடேஷ், குருமூர்த்தி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர்.
வேன் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கோபி அருகே ஓடும் வேனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: