தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேரலாம்

கிருஷ்ணகிரி, ஆக.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரியில் சேர்ந்து பயனடையலாம். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் வாயிலாக, 12ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த மாணவர்கள், உயர் கல்வி பயில ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள பாடப்பிரிவுகளுக்கு கடந்த 21ம் தேதி முதல் நேரடி சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, 12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உடனடியாக தங்கள் கல்வி பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொண்டு, கல்லூரியில் சேர விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

The post தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேரலாம் appeared first on Dinakaran.

Related Stories: