பாத கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

இடைப்பாடி, ஆக.24: பூலாம்பட்டி பேரூராட்சி பொன்னாக்கவுண்டனூரில், சப்த கன்னிமார் பாத கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசத்திற்கும், பாத கருப்பணசுவாமிக்கும், சப்த கன்னியர்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பாத கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: