ஒன்றிய அரசின் நீட் தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நீட்டை ரத்துசெய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. நீட்தேர்வால் தற்கொலை செய்தவர்களின் படங்களை கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

The post ஒன்றிய அரசின் நீட் தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: