I.N.D.I.A. கூட்டணி என்பது காலியான வாடகைக் காருமல்ல; பயணிகள் இல்லாத காரும் அல்ல: நக்விக்கு சவுகதா ராய் பதில்

டெல்லி: I.N.D.I.A. கூட்டணி பலம் மிகுந்த அணியாக உருவாகி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, 2024 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி தனது முந்தைய தொகுதியான அமேதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காங்கிரஸ் அமேதி மக்களை சூயிங்கம் போல பயன்படுத்தினர். அவர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. பயணிகள் இல்லாத கார்தான் I.N.D.I.A. கூட்டணி என்று விமர்சனை செய்தார்.

அதேசமயம் பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகியின் தலைமை நிலப்பரப்பை மாற்றியுள்ளது. நகரத்தின் மற்றும் பல்வேறு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பயணிகள் இல்லாத கார்தான் I.N.D.I.A. கூட்டணி என்று விமர்சித்த முக்தார் அப்பாஸ் நக்விக்கு சவுகதா ராய் பதில் அளித்துள்ளார். I.N.D.I.A. கூட்டணி பலம் மிகுந்த அணியாக உருவாகி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஓரணியில் இருக்க உறுதி பூண்டுள்ளன. எனவே I.N.D.I.A. கூட்டணி என்பது காலியான வாடகைக் காருமல்ல; பயணிகள் இல்லாத காரும் அல்ல. இவ்வாறு தெரிவித்தார்.

The post I.N.D.I.A. கூட்டணி என்பது காலியான வாடகைக் காருமல்ல; பயணிகள் இல்லாத காரும் அல்ல: நக்விக்கு சவுகதா ராய் பதில் appeared first on Dinakaran.

Related Stories: