இஸ்தான்புல்லின் ஆசிய பக்கத்தில் இருந்து அதன் ஐரோப்பிய பக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் 77 நாடுகளை சேர்ந்த 2600 வீரர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் நீச்சல் அடித்த காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்தது. போஸ்பரஸ் ஜலசந்தியில் 6.5கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் பெண்கள் பிரிவில் முர்கதாஸ் நரின் மற்றும் ஆண்கள் பிரிவில் துகாக்கன் உலாக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் முறையே 45 நிமிடத்தில் இலக்கை கடந்தனர்.
The post இஸ்தான்புல்லில் நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி: ஒரே நேரத்தில் 77 நாடுகளை சேர்ந்த 2,600 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.