உரிமை குழு முன் ஆஜராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரிக்கு உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்யப் பட்டார். மேலும், இது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உரிமைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார். குழுவில் உள்ள பல உறுப்பினர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறவதற்கான கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வரும் 30ம் தேதி குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஆதிர்ரஞ்சனுக்கு உரிமை குழு உத்தரவிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post உரிமை குழு முன் ஆஜராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: