தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே அமலி நகர் மீனவர்களுடன் ஆட்சியர் 2ஆவது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். 12 ஆவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் மீனவர்களுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். தூண்டில் வளைவு அமைக்க கோரி அமலி நகர் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.