காற்றாடி திருவிழாவில் 2வது நாளில் வீரர்கள் அசத்தல்

 

மாமல்லபுரம், ஆக. 14: இந்தியாவின் 77வது சுதந்திர முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்து 2வது சர்வதேச காற்றாடி திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்தி வருகின்றன. இதில் இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு காற்றாடிகளை பறக்க விட்டு அசத்தினர்.

இதேபோல், இன்று 3வது நாளாக 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு காற்றாடிகளை கொண்டு வந்து, காற்று நிரப்பி பறக்க விட்டு வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். காற்றாடி, பறக்க விடும் நிகழ்வை காண ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக குவிந்தனர். அவர்கள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால், வளாகம் முழுவதும் பார்வையாளர்கள் கூட்டம் களைகட்டியது.

The post காற்றாடி திருவிழாவில் 2வது நாளில் வீரர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: