மேலும் மணிகண்டன், வேலு, பரந்தாமன், அப்பாஸ் ஆகியோர் எதிர்தரப்பை சேர்ந்த சுரேஷ், மித்ரன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். மேலும் அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் அதிலிருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர். எஸ்.பி. வருண்குமார் நேரில் விசாரணை நடத்தினார். சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
The post கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.