இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘5 ஆண்டு நியமிக்கப்பட்ட பிரபல கணக்கு தணிக்கை நிறுவனம் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே பொறுப்பிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை தீவிரமான பல கேள்விகளை எழுப்புகிறது. எனவே செபியின் நாளைய அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற நிபுணர் குழு ஏற்கனவே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இருக்குமா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எப்போதுதான் தனது மவுனத்தை கலைப்பார்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post அதானி நிறுவன முறைகேடு பற்றி செபி வெளியிடும் அறிக்கை சந்தேகத்தை தீர்க்குமா?.. காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.