டூவீலர்கள் மோதி வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை, ஆக.12: தேன்கனிக்கோட்டை அடுத்த என்.உச்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(39). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் காலை, மாதேஷ் தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த மற்றொரு டூவீலர், மாதேஷின் டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாதேசை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி மாதேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: