மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மதுரை: மதுரை, சவுராஷ்டிராபுரம், கவி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்‘ சந்திரா (64). இவர், உடல்நலக்குறைவு காரணமாக அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று சென்றார். அங்கு, அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்வயரில் சந்திராவின் கைபட்டதால், அவர் மீது, மின்சாரம் பாய்ந்தது. அதில், துாக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: