பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

ஈரோடு: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆண்டு பேரவை கூட்டம் ஈரோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் குழந்தைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் அபிமன்யு வரவேற்றார். துணை தலைவர் குப்புசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் ஜோதிமணி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர் பணிக்காலத்தை சேர்த்து ஓய்வூதியம் கணக்கிட வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப்பின் தலைவராக கொழந்தசாமி, செயலாளராக மூர்த்தி, பொருளாளராக லோகுசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: