வேதாரண்யத்தில் குப்பை மேலாண்மை கருத்தரங்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் வர்த்தக சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று மற்றும் குப்பை மேலாண்மைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும் வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவருமான தென்னரசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வணிகர் சங்க நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன், சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், திருப்பூர் வீரபத்மன் குப்பை மேலாண்மை குறித்து கருத்துரை வழங்கினார்.

The post வேதாரண்யத்தில் குப்பை மேலாண்மை கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: