புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காததால், வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் கிலோவிற்கு ரூ.30 வரை உயர வாய்ப்புள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் அவர்கள் அதிக அளவில் பச்சரிசி பயன்படுத்துவதால் அங்கு பச்சரிசியின் விலை குறைந்துள்ளது. இதன்மூலம் அந்த மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை ஒன்றிய அரசு செய்துள்ளது. எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு குறைய வாய்ப்பு உள்ளது. விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையில் மட்டுமே நெல்லை விற்க முடியும். ஆனால் இடைப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால் உடனடியாக ஒன்றிய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அரிசி விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.