காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கைது

மும்பை: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் வகையில், மும்பை கிர்காவ் சவுபாத்தியில் இருந்து ஆகஸ்ட் கிராந்தி மைதானத்துக்கு பேரணி ஒன்று நடத்தப்பட இருந்தது. இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். இதற்காக அவர் வீட்டில் இருந்து புறப்பட்டபோது வீட்டுக்கு வெளியே காத்திருந்த போலீசார் சட்டம் ஒழங்கு பாதுகாப்பை காரணம் காட்டி வெளியே செல்ல விடாமல் கைது செய்தனர். வீட்டிலேயே சிறை வைக்கப்பட்ட துஷார் காந்தி, சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் கிராந்தியில் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டார்.

The post காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கைது appeared first on Dinakaran.

Related Stories: