இதுதொடர்பாக இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்ற நீதிபதி ஹுமாயூன் திலாவர் தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது லாகூரில் உள்ள சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை : பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு!! appeared first on Dinakaran.
