இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே கீழ்பவானி கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாழை, கரும்பு, மஞ்சள் பயிர்களை கைகளில் ஏந்தி அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கான அரசாணை எண் 276-ஐ ரத்து செய்யவும், பழைய கட்டுமானங்களை மட்டும் சீரமைத்து விட்டு மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். பவானி சாகர் அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ்பவானி கால்வாய் செல்கிறது. இதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
The post கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட்டு ஆக.15-ல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.