குலாம் நபி கட்சி தலைவர்கள் காங்.கில் ஐக்கியம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்தின் கட்சி தலைவர்கள் 21 பேர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தனர். காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை கடந்தாண்டு தொடங்கினார். இந்நிலையில், ஆசாத் கட்சியை தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 21 தலைவர்கள் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். இதில், முன்னாள் அமைச்சர் யஷ்பால் குந்தால்,ஹாஜி அப்துல் ரஷித், நரேஷ் குப்தா ஆகியோர் முக்கியமானவர்கள். அப்போது காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரஜினி பாட்டீல்,ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விகார் ரசூல் வனி ஆகியோர் உடனிருந்தனர்.

The post குலாம் நபி கட்சி தலைவர்கள் காங்.கில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: