ரத்த தான முகாம்

தூத்துக்குடி, ஆக. 5: தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது. தொமுச பொதுச் செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல பொதுமேலாளர் வீருகாத்தான் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் முருகன், துணை பொதுச் செயலாளர் மகாவிஷ்ணு, தலைமை நிலைய செயலாளர் கருப்பசாமி, கோட்ட மேலாளர் மாரியப்பன், கிளை மேலாளர்கள் மாடசாமி, ஜெகதீசன், தூத்துக்குடி நகர கிளை செயலாளர் மரியதாஸ் மற்றும் மண்டல கிளை செயலாளர்கள், தொமுச நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

The post ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: