லேசான காயத்துடன் தப்பி ஓடிய மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டதில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ராம்குமாருக்கு எதிராக சாட்சி சொல்ல மாட்டேன் என மணிகண்டன் பணம் வாங்கியதாகவும், பணத்தை வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி சொல்லியதால் மணிகண்டனை வெட்டியதாகவும் ராம்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவரை வெட்டிய ரவுடி கைது appeared first on Dinakaran.