செவிலியர் கடத்தல்

கிருஷ்ணகிரி, ஆக.4: கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்த 22வயது இளம்பெண், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 9மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார்அளிக்கப்பட்டது. அதில், எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரகாஷ்(22) என்பவர் இளம்பெண்ணை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post செவிலியர் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: