நம் எல்லோருக்கும் அவர் முதல்வர் தானே, அதனால் மரியாதை நிமித்தமாக நானும் சாலையிலேயே நின்றுவிட்டேன். காரில் இருந்தபோது என்னை பார்த்த முதல்வர், இறங்கி வந்து ‘இங்கதான் இருக்கீங்களா’ என நலம் விசாரித்தார். நான் எதிர்பார்க்கவேயில்லை அப்போது. ‘ஏன் சார், நானே வந்திருப்பேனே’ என்றேன். பரவாயில்லை என்றவர், இப்பகுதியின் குறைகளை கேட்டறிந்தார். நான் இங்குள்ள கழிவுநீர் குறித்த குறைகளை சொன்னேன். அனைத்தையும் கேட்டுவிட்டு ‘அதை பார்வையிடத்தான் நானே நேரடியாக வந்தேன். நிச்சயம் சரிசெய்யப்படும்’ என்றார். முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன். முதல்வராக அவரை பார்ப்பதிலும், இறங்கி நின்று பதில் சொல்லிவிட்டு அவர் சென்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
The post அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் குறைகேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: காரில் இருந்து இறங்கி வந்ததால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.